Monday, April 11, 2016

தாமதம் ஏனோ?

தாமதம் ஏனோ
தயை புரிய, அருள?
தரணியெல்லாம் காக்கும்
தாயுன் உளமிரங்க?
(தாமதம்)

பலப் பலவாய்ப் பிறந்தேன்
பவவினையில் உழன்றேன்
கதிநீ யென உணர்ந்தேன்
காலடியில் விழுந்தேன்
(தாமதம்)

விளையாட்டாய் இந்த உலகினை நீ படைத்தாய்
விளையாடி மகிழ பொம்மைகள் பல தந்தாய்
மாயையினில் மயங்கி உனை மறத்தல் தகுமோ?
அன்னையுன் அருளென்றென் இதயத்தில் ஒளிர் விடுமோ?


--கவிநயா 



No comments:

Post a Comment