Monday, April 25, 2016

எல்லாம் உன்னாலே!





ஷண்முகப்ரியா ராகத்தில் சுப்பு தாத்தாவின் அன்புக் குரலில்... மிக்க நன்றி தாத்தா!
 

எல்லாம் உன்னாலே,

எதுவும் இல்லை தன்னாலே!

(எல்லாம்)



அணுவும் அசையும் உன்னாலே!

அண்டம் அடங்கும் உன்னாலே!

நீரும் நிலமும் உன்னாலே, அந்த

நிலவும் மலரும் உன்னாலே!

(எல்லாம்)



காயும் கனியும் உன்னாலே!

கனியின் விதையும் உன்னாலே!

விதைக்குள் மரமும் உன்னாலே, அந்த

மரத்தின் உயிரும் உன்னாலே!

(எல்லாம்)



மனித இனமும் உன்னாலே!

மனித மனமும் உன்னாலே!

மனதின் மயக்கம் உன்னாலே, அந்த

மயக்கம் தெளிதல் உன்னாலே!

(எல்லாம்)



ஐம் பூதங்கள் உன்னாலே!

ஐம் புலன்களும் உன்னாலே!

புல னடங்குதல் உன்னாலே, நீ

புலப் படுவதும் உன்னாலே!

(எல்லாம்)



வினையும் பயனும் உன்னாலே!

பிறவி பலவும் உன்னாலே!

உனை நினைப்பது உன்னாலே, உன்

அருள் கிடைப்பதும் உன்னாலே!!

(எல்லாம்)


--கவிநயா

No comments:

Post a Comment