Monday, April 4, 2016

எனக்கும் அருள்வாயோ?


தர்மாவதியில் சுப்பு தாத்தா இனிமையுடன் பாடித் தந்தது... மிக்க நன்றி தாத்தா!



எனக்கும் அருள்வாயோ?

மயக்கம் களைவாயோ?

(எனக்கும்)



தூய உள்ளந் தன்னைத் தருவாயோ?

அதில் தங்கிக் குடியிருக்க வருவாயோ?

நேயங் கொண்ட பிள்ளை அறியாயோ?

உன் மாயம் விட்டு அருள் புரியாயோ?

(எனக்கும்)



தாயே எந்தனுயிர் நீயே என்று தினம்

கூவும் பிள்ளை குரல் கேளாயோ?

நாயேன் எனினும் உந்தன் சேயே நானும்

எனும் நேசம் கொண்டு என்னைப் பாராயோ?

(எனக்கும்)


--கவிநயா 

No comments:

Post a Comment