Monday, June 13, 2016

துணை நீயே!


ராகமாலிகாவில் சுப்பு தாத்தா மனமுருகப் பாடியது... மிக்க நன்றி தாத்தா!



உன்னெழில் வதனத்தை ஓவியமாக

உள்ளத்தில் எழுதி வைத்தேன்

உன்திருப் புகழினைக் காவியமாக

கவிதையில் பாடி வைத்தேன்



உன்நினை விருந்தால் ஒவ்வொரு நாளும்

உன்னத நாளாகும்

உன்உறவிருந்தால் ஒவ்வொரு வாழ்வும்

உன்னத வாழ்வாகும்



அம்மா என்ற ஒரு சொல்லினிலே

ஆயிரம் பொருளுண்டு

சும்மா அதனைச் சொன்னால் கூட

அன்னையுன் அருளுண்டு



அன்பாய் உன்னை அழைத்தால் அழுதால்

அம்மா உன்னைப் பெறலாமே

தைலத் தாரை போலே உன்னை நினைத்தால்

என்றும் துணை நீயே


--கவிநயா 

No comments:

Post a Comment