Monday, June 27, 2016

அருள் புரி!

இம்முறை www.thillaikathuchronicles.blogspot.com உரிமையாளர், கீதாம்மாவும், சுப்பு தாத்தாவுடன் சேர்ந்து ஆனந்த பைரவியில் பாடி, ஆனந்தத்தை இரட்டிப்பாக்கியிருக்கிறார்கள்.. மிக்க நன்றி, சுப்பு தாத்தா, மற்றும் கீதாம்மா!!



அன்பு கொண்டு உனை அடைந்தேன் அம்பிகையே
அன்னை என்று உனை அறிந்தேன் அருள்புரியேன்
(அன்பு)

அகிலங்கள் யாவும் உந்தன் ஆட்சியிலே, உயிர்
அத்தனையும் வாழ்வ துந்தன் மாட்சியிலே
(அன்பு)

சிந்தைதனை உனில் நாட்டி
உள்ளந்தனில் உனைப் பூட்டி
விந்தைமிகும் உனைப் போற்றி
வாழுகிறேன்
உந்தனையே எண்ணி தினம்
பாடுகிறேன்
(அன்பு)


--கவிநயா


No comments:

Post a Comment