Monday, September 5, 2016

தில்லை வாழ் சிவகாமி!



ஆனந்த பைரவியில் சுப்பு தாத்தா ஆனந்தமாகப் பாடியிருக்கிறார்... மிக்க நன்றி தாத்தா!



கீதா ரங்கன் அவர்கள் வராளி ராகத்தில் இழைத்துப் பாடியிருக்கிறார்கள். மிக்க நன்றி கீதாம்மா!



என் மன இருள் அகற்றி அருள் தருவாய்

இருளுக்குள் ஒளியாக நீ வருவாய்

(என் மன)



சிதம்பர நடராஜன் இடமிருக்கும் தேவி

தில்லைநகர்க் கூத்தனுடன் திகழ்ந்திடும் சிவகாமி

(என் மன)



தத் தித் தோ மென்று நந்தி மத்தளங் கொட்ட

தக தித் தோ மென்று பிரம்மன் தாளந் தட்ட

ததிங் கிண தோ மென்று ஆடிடும் அரசனுடன்

தந்தோம் தந்தோ மென்று சிந்தை மகிழ வந்து

(என் மன)


--கவிநயா


2 comments:

  1. அருமையா வந்திருக்கு!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஜீவா! உங்களை இங்கே பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி!

      Delete