Monday, October 17, 2016

அபிராமி!



கீதாம்மாவின் இனிய குரலில்ல், இசையில் மிக்க நன்றி கீதாம்மா!

அபிராமி உன் பாதம் பணிந்து விட்டேன்
அபயமென்று அடைக்கலமாய் வந்து விட்டேன்

(அபிராமி)



திருக்கட வூரினிலே அபிராமி

தில்லை நகர்ச் சிதம்பரத்தில் சிவகாமி

மாநகர் மதுரையிலே மீனாக்ஷி

கோவில் நகர்க் காஞ்சியிலே காமாக்ஷி

(அபிராமி)



ஆயிரமாயிரம் பெயர் கொண்டாய், ஆயினும்

அன்னை என்றே என்நெஞ்சில் நிலை கொண்டாய்

பாயிரம் ஆயிரம் பாடுகின்றேன்

பயிரவி நினதருளை நாடுகின்றேன்

(அபிராமி)


--கவிநயா 

No comments:

Post a Comment