Wednesday, October 5, 2016

மா லக்ஷ்மி தாயே!




கீதாம்மாவின் தேனினிய குரலில் சங்கராபரணம் ராகத்தில்.... மிக்க நன்றி கீதாம்மா! 

மா லக்ஷ்மி தாயே!

மலர் பூத்த மாயே!

மாலவனின் மணிமார்பில்

மகிழ்ந்திருப்பாயே!

(மா லக்ஷ்மி)



அழகுக்கு அழகான

திருமகள் நீயே!

அகிலமெல்லாம் போற்ற

அலைகடல் உதித்தாயே!

(மா லக்ஷ்மி)



செல்வங்கள் யாவற்றிற்கும்

அதிபதி நீயே!

எந்தச் செல்வம் வந்த போதும்

எந்தன் செல்வம் நீயே!



விண்ணும் மண்ணும் அளந்தவனின்

கண்ணின் மணி நீயே!
நெல்லிக் கனி ஒன்றிற்காக

பொன்மழை பொழிந்தாயே!
(மாலக்ஷ்மி)


--கவிநயா 


No comments:

Post a Comment