Sunday, October 9, 2016

வாணியை வேண்டுதல்



வாணியை வேண்டுதல் 
(பாரதியாரின்  பாஞ்சாலி சபதத்திலிருந்து  கிடைத்த 
 சரஸ்வதி  துதி )

தெளிவுறவே அறிந்திடுதல்;தெளிவுதர 

            மொழிந்திடுதல்;சிந்திப்பார்க்கே 

களிவளர உள்ளத்தில் ஆனந்தக்கனவு பல 

              காட்டல் ,கண்ணீர்த் 

துளிவர உள்ளுருக்குதல், இங்கிவையெல்லாம்

               நீ அருளும் தொழில்களன்றோ ?

ஒளிவளருந்தமிழ்வாணீ !அடியநேற் 

                 கிவையனைத்தும்  உதவுவாயே.
 

No comments:

Post a Comment