Monday, February 20, 2017

தாய் நீதானே!




கீதாம்மா தன் அருமைக் குரலில்... அம்மாவை அழைக்கிறார்...மிக்க நன்றி கீதாம்மா!

அம்மா அம்மா என்றழைத்தேன்

ஆதி பராசக்தி உனை அழைத்தேன்

ஆதியும் அந்தமும் நீதான் எனினும்

அன்புத்தாயும் கூட நீதானே!

(அம்மா)



அண்டங்கள் யாவையும் பூத்தவளே

அகிலங்கள் யாவையும் ஆள்பவளே

மூன்று தொழிலையும் ஏற்றவளே

முப்பெருந் தேவியாய் ஆனவளே

(அம்மா)



வாலைக் குமரியும் நீதானே

வஞ்சி இள மயில் நீதானே

கோல லலிதை நீதானே

கோபமா காளியும் நீதானே

(அம்மா)


-- கவிநயா


No comments:

Post a Comment