Monday, September 4, 2017

அம்மா...அம்மா...


நாளும் உன்னை நினைத்து நினைத்து ஏங்குகின்றேனே
நாயகியே உன் புகழைப் பாடுகின்றேனே
(நாளும்)

செந்தமிழில் பல கவிதை புனையத் தந்தாயே
வெந்த மனதில் தென்றலாக வீச வந்தாயே
(நாளும்)

அடி மனதில் உன் நினைவே ஓடுகின்றதே
அழகழகாய் கோலம் பல போடுகின்றதே
பிடியிடையாள் உன்மேல் பிரியம் அதிகமாகுதே
கொடிய விதியும் என்னை விட்டு விலகி ஓடுதே
(நாளும்)


--கவிநயா

 

4 comments:

  1. அழகான வரிகள்
    நன்றி அக்கா !

    ReplyDelete
  2. மிக்க நன்றி, ஷைலன்

    ReplyDelete

  3. "வெந்த மனதில் தென்றலாக வீச வந்தாயே"
    அருமை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி லலிதாம்மா

      Delete