Monday, April 30, 2018

பரம தயாபரியே


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

சித்தத்திலே வைத்துப் போற்றுகின்றேன்
சிவையே, உமையே, சிவன் துணையே, உன்னை
(சித்தத்திலே)

சித்திர அழகே சத்திய வடிவே
மத்துறு வாழ்வினில் வளர் முழு மதியே
பித்தனின் இடம் கொண்ட பிச்சினியே, எம்மை
பத்திரமாய்க் காக்கும் பரம தயாபரியே
(சித்தத்திலே)

வித்தையெல்லாம் தரும் கலைமகள் நீயே
வினைகளெல்லாம் தீர்க்கும் கணபதி தாயே
முத்தெழில் திருமகளாம் அலைமகளும் நீயே
முத்தமிழ் முருகனுக்கு சக்திவேல் தந்தாயே
(சித்தத்திலே)


--கவிநயா

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. முத்தெழில் அர்த்தம் என்ன என்று கூறவும், நன்றி

    ReplyDelete