Monday, May 21, 2018

துர்கா லக்ஷ்மி சரஸ்வதி




கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

துர்கா லக்ஷ்மி சரஸ்வதி
            ஆதி சக்தியின் ரூபங்கள்
வீரம் செல்வம் கல்வி யாவும்
            வழங்கும் அன்னையின் வடிவங்கள்

அம்மா அம்மா என்றே நாம்
            அன்புடன் அழைத்தால் வருவாளே
அல்லல் எல்லாம் களைவாளே
            அருளை அள்ளித் தருவாளே

நான்முகனுடனே நா மகளாய்
            ஸ்ரீஹரியுடனே அலை மகளாய்
சிவனுடன் அவளே மலை மகளாய்
            அருளும் அன்னை அவள்தானே 


--கவிநயா

2 comments:

  1. நான்முகனுடனே நா மகளாய்
    ஸ்ரீஹரியுடனே அலை மகளாய்
    சிவனுடன் அவளே மலை மகளாய்
    அருளும் அன்னை அவள்தானே

    யாவர்க்கும் அன்னை அவள்தானே!

    அழகான வரிகள்
    நன்றி அக்கா !

    ReplyDelete
  2. ரொம்ப நாளாச்சு பார்த்து... மிக்க நன்றி ஷைலன்.

    ReplyDelete