Monday, January 28, 2019

அழகி!



கமலங்கள் உந்தன் எழில் கண்டு மயங்கும்
அன்னங்கள் உந்தன் நடை கண்டு தயங்கும்
கதிரவன் உந்தன் ஒளி கண்டு ஒளிவான்
சந்திரனும் உந்தன் தண்மையில் குளிர்வான்
(கமலங்கள்)

உலகினைக் காப்பவளே உன்னிரு விழியால்
உனைத் தினம் பாடுகிறேன் என் தமிழ்மொழியால்
பவ வினைகளைக் களைவாய் பார்வதி தாயே
சிவை சிவை என்று வந்தேன் என் துணை நீயே
(கமலங்கள்)

சிறுபிள்ளை என்னிடம் உனக்கென்ன வழக்கு
ஒரு முறை பார்ப்பதிலே உனக்கென்ன கணக்கு
என்னிடம் ஏன்தானோ உனக்கின்னும் பிணக்கு
உன்னடி சேர்ந்திடவே வழி விடுவாய் எனக்கு
(கமலங்கள்)



--கவிநயா


No comments:

Post a Comment