Tuesday, March 12, 2019

சிக்கெனப் பிடிக்க வேண்டும்



சிக்கென உனைப் பிடிக்க அருள்வாயே, எந்தன்
சிந்தையிலே தங்க வருவாயே
(சிக்கென)

பித்தனின் இடப்புறம் அமர்ந்தவளே, அவன்
சித்தமெல்லாம் நிறைந்து கலந்தவளே
(சிக்கென)

பரமன் விடம் உண்டான், பதறி விட்டாய், உந்தன்
கரத்தால் கண்டத்துடன் நிறுத்தி வைத்தாய்
மும்மலம் என்னும் விடம் எனைத் தாக்க, நீ
என்று வந்து நிறுத்திடுவாய் எனைக் காக்க?
(சிக்கென)



--கவிநயா

No comments:

Post a Comment