Monday, March 18, 2019

வரவேண்டும் சிவகாமி



அம்மா, எனை ஆளும் அபிராமி
உன்பாலே எனை ஈந்தேன் சிவகாமி
(அம்மா)

அண்டமெல்லாம் படைத்த அற்புதமே
உனையன்றி எவரெனக்கு அடைக்கலமே
(அம்மா)

அம்மா என உனைத்தான் அனுதினமும் அழைத்தேன்
அன்றாடம் உன் பதமே கதியெனவே துதித்தேன்
மன்றாடும் பிள்ளைக் கிரங்க ஏன் இன்னும் தாமதமோ?
கன்றின் கதறல் கேட்டும் வாராவிட்டால் தகுமோ?
(அம்மா)


--கவிநயா

No comments:

Post a Comment