Monday, March 25, 2019

சுவாசக் காற்று



எத்தனை துன்பங்கள் வந்தாலும் உன்
பதமே எந்தன் கதியாகும்
எத்தனை சோதனை வந்தாலும் உன்முகமே
மனதில் நிலையாகும்
(எத்தனை)

உனையே தினமும் நினைந்திடவும், உன்
புகழே தினமும் நவின்றிடவும்
உன்னருள் தந்தாய் நீயம்மா
பிறகென்னை மறந்ததும் ஏனம்மா?
(எத்தனை)

நீயே கருணையின் வடிவன்றொ?
கடலும் அளவினில் சிறிதன்றோ?
உன் நினைவே என் தாலாட்டு, உன்
பெயரே எந்தன் சுவாசக் காற்று
(எத்தனை)


--கவிநயா

No comments:

Post a Comment