Tuesday, June 16, 2020

நின்னைச் சரணடைந்தேன்

வணக்கம். ஒரு மாறுதலுக்காக இன்றைக்கு என் சொந்தப் பாடல் இல்லாமல், எனக்குப் பிடித்த பாரதியார் பாடல்களில் ஒன்று:



நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்
(நின்னை)

பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் 
தின்னத் தகாதென்று
(நின்னை)

மிடிமையும், அச்சமும், மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன 
கொன்றவை போக்கென்று
(நின்னை)

தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து 
நிறைவு பெறும் வண்ணம்
(நின்னை)

துன்பம் இனியில்லை, சோர்வில்லை, சோர்வில்லை, தோற்பில்லை
நல்லவை, தீயவை, நாமறியோம், நாமறியோம், நாமறியோம்
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட,
நல்லவை நாட்டுக, தீயவை ஓட்டுக்
(நின்னை)


அன்புடன்
கவிநயா

No comments:

Post a Comment