Tuesday, June 23, 2020

ஆதி சக்தியே! அன்புத் தாயே!


மதுரையிலே நீ மீனாக்ஷி

காஞ்சியிலே நீ காமாக்ஷி

தில்லையில் உன்பேர் சிவகாமி

நெல்லையில் உன்பேர் காந்திமதி

(மதுரையிலே)

 

புதுக்கோட்டையிலே புவனேஸ்வரி நீ

திருமியச்சூரில் லலிதாம்பா

திருவேற்காட்டில் கருமாரி

திருக்கடவூரில் அபிராமி

(மதுரையிலே)

 

கிருஷ்ணா நதியின் தீரத்திலே

கனக துர்க்கையாய் வீற்றிருப்பாய்

கங்கைக் கரையின் ஓரத்திலே

காளி தேவியாய்க் கருணை செய்வாய்

 

நாயகி நீயே நான்முகி நீயே 

   நாராயணியும் நீயே

காளியும் நீயே நீலியும் நீயே 

   கருணையின் வடிவம் நீயே

சாம்பவி நீயே சங்கரி நீயே 

   சக்ரதாரியும் நீயே

ஆதியும் நீயே அந்தமும் நீயே 

   அன்பு வடிவான தாயே

(மதுரையிலே)



---கவிநயா


No comments:

Post a Comment