Monday, June 8, 2020

திரு நாள் என்றோ?



உனைக் காணும் நாள் என்றோ

தினம் ஏங்கினேன்

உன்றன் திருப்பதம் தானே

தினம் நாடினேன்

 

கணக்கில்லாக் கருவேறிப்

பிறந்தேனம்மா

இப்பிறப்பிலேனும் உன்னைத்

தொழுதேனம்மா

 

சிறுபிள்ளை செய்பிழைகள்

பொருட்டாகுமோ?

உலகேழும் (உன்) கடைப் பார்வைக்

கீடாகுமோ?

 

திருமுகம் நான் காண நீயும்

வரும் நாளென்றோ?

(நான்) உன் திருப்பாத மலர் சூடும்

திரு நாளென்றோ?



--கவிநயா


No comments:

Post a Comment