Tuesday, June 1, 2021

வர வேண்டும்

 

கல்லான என் மனதில்

கருணைப் பதம் வைத்து

அம்மா நீ அருள் செய்ய வாராயோ

என் உள்ளே உயிர் உருகத் தாராயோ

(கல்லான)

 

கள் போல உன் நாமம் பருகிக் கிறங்கிடவும்

உள்ளத்தில் ஆனந்தம் பொங்கிப் பெருகிடவும்

(கல்லான)


தஞ்சம் என்றுனை அடைந்தேன்

தவறாமல் வர வேண்டும்

தாயே உன் பதமலரைத் தர வேண்டும்

மாயே நீ மறுக்காமல் வர வேண்டும்

(கல்லான)


--கவிநயா



No comments:

Post a Comment