Tuesday, June 15, 2021

அடைக்கலம் நீயே

 


பாடலை ஒலி வடிவில் இங்கே கேட்கலாம்...


அடைக்கலம் நீயே அம்பிகை தாயே

அழைக்கின்றேன் கடைக்கண் பார்த்திடுவாயே

(அடைக்கலம்)

 

சடுதியில் வருவாய்

கொடுவினை களைவாய்

அஞ்சலென் றருள்வாய்

தஞ்சம் தந்திடுவாய்

(அடைக்கலம்)

 

ஒரு முறை பார்த்தாலும்

உயிருக்குச் சுகமாகும்

மழை கண்ட பயிர் போல

மனம் கண்டு கூத்தாடும்

 

மகிடனின் தலை மீதில்

மலர்ப்பதம் பதித்தவளே

மயங்கிடும் என்னுள்ளம்

மகிழ்ந்திட வர வேண்டும்

(அடைக்கலம்)

 

 

--கவிநயா


No comments:

Post a Comment