Tuesday, June 22, 2021

அன்னையின் அழகு

 

பாசாங்குசம் ஏந்தி

பஞ்சமலர்க் கணையேந்தி

பூத்த செந்தாமரை போல் விற்றிருப்பாள், அன்னை

கூத்தனுடன் நம்மைக் காத்திருப்பாள்

(பாசாங்குசம்)

 

வட்ட முகம் முழு மதியாம்

பட்டு மலர் அவள் இதழாம்

மொட்டவிழ்ந்த மலர் போல

கொட்டி விடும் அவள் சிரிப்பாம்

(பாசாங்குசம்)

 

இடையினில் கொடி வளைய

நடை அன்னமென இழைய

கடை விழி சிறிதசைய

மடையென அருள் பொழிய

 

குறுநகை தவழ்ந்திருக்க

கருவிழி கனிந்திருக்க

விடையினில் அமுதீசன்

அருகினிலே இருப்பாள்

(பாசாங்குசம்)

 

 

--கவிநயா


No comments:

Post a Comment