Monday, June 7, 2021

மழை போல்...


நானே மெட்டமைத்துப் பாடியிருக்கிறேன். சகிக்க முடிந்தால் கேட்டுப் பாருங்கள்!


மழை போல் கருணை பொழியும் தாயே

நனைந்தின்பம் பெறவும் அருள்வாய் நீயே

(மழை)

 

பழ வினை கழிய, வரு வினை களைய

பத நிழலில் இடம் தருவாய் தாயே

(மழை)

 

உன் நினைவொன்றே உள்ளம் விழைந்திட

உன் பெயரொன்றே நாவினில் தவழ்ந்திட

ஐம்புலனும் உன்னை அறிந்தே பணிந்திட

ஐந்தொழில் அரசி உனை நான் அடைந்திட

(மழை)

 

--கவிநயா


1 comment: