Monday, October 18, 2010

கற்பனைக் கெட்டாத கற்பகமே!



கற்பனைக் கெட்டாத கற்பகமே
அன்புருவே அமுதே அற்புதமே

பொற்பதம் பணிதலன்றி வேறறியேன் - உன்றன்
நற்புகழ் பாடலன்றி தொழிலறியேன்

பற்பலரும் போற்ற பனிமலை வீற்றிருப்பாய்
சொற்பதங் கள்கடந்த சுந்தர னுடன்களிப்பாய்
நற்கதி அருள்பவளே நலந்தரும் உமையவளே
சிற்சபை யில்ஆடும் சிவனிடம் உறைபவளே!


--கவிநயா

5 comments:

  1. அருமையான பாடல்.

    சியாம கிருஷ்ண சகோதரி
    சிவசங்கரி பரமேஸ்வரி - நினை
    ஏத்துகிறாள் ராதா சகோதரி - செவி
    சாய்த்து அழகா நீ சிரி.
    :-)

    ReplyDelete
  2. //நினை
    ஏத்துகிறாள் ராதா சகோதரி - செவி
    சாய்த்து அழகா நீ சிரி.//

    ச்சோ ச்வீட். லவ் இட் :)

    நன்றி தம்பீ :)

    ReplyDelete
  3. உண்மையிலே கற்பகம்பாளின் அருள்
    அற்புதமே ! அதைப் பாடி மகிழும் உங்கள் மன்மும்
    அவள் உறைவிடமே..

    இங்கே சுப்பு தாத்தா பாடியிருக்கிறார். சஹானா ராகத்தில்.
    கூடவே ஒரு போனஸாக, எங்கள் மகள் செள்த் ப்ரன்ச்விக் என்.ஜெ.
    வீட்டு கொலுவும் வீடியோவில் வருகிறது.

    சுப்பு ரத்தினம்.
    http://menakasury.blogspot.com
    http://kandhanaithuthi.blogspot.com

    ReplyDelete
  4. http://www.youtube.com/watch?v=ASAzPC_kd6U

    same song in Raag Shanmughapriya

    subbu thatha

    ReplyDelete
  5. வாங்க தாத்தா. உங்கள் மகள் வீட்டுக் கொலுவையும் கண்டு களித்தேன். சுண்டல்தான் கிடைக்கலை :(

    இரண்டு ராகங்களிலும் பாடல் அழகா வந்திருக்கு. வழக்கம் போல நானாகவும் மனதுக்குத் தோன்றிய மெட்டில் பாடிக் கொள்வதுண்டு (ராகம் பெயரெல்லாம் தெரியாமலயே). இப்போதான் தெரியுது, நான் பாடிக் கொண்டதும் ஷண்முகப்ரியா என்று :)

    மிகவும் நன்றி தாத்தா.

    ReplyDelete