Monday, June 13, 2011

அன்பாலே பாடுகிறேன்...


உன்மேலே அன்புகொண்டேன் உன் னாலே
அன்பாலே பாடுகிறேன் தன் னாலே

அம்மாநீ வந்து நின்றால் முன் னாலே
என்வாதை தீருமடி தன் னாலே

ஆயிரம் ஆயிராமாய் குற்றங்குறை கள்இருக்கும்
பாடுகின்ற பாடலிலும் எத்தனையோ பிழையிருக்கும்
ஆயிரம் இருந்தாலும் நானுமுன் பிள்ளையன்றோ
தாயென நீபரிந்தால் வெந்தணலும் சந்தனமன்றோ

--கவிநயா

9 comments:

  1. //தாயென நீபரிந்தால் வெந்தணலும் சந்தனமன்றோ// excellent!! :)

    ReplyDelete
  2. குற்றங்குறை இல்லாதோர் அவனியிலே எவருமில்லை;

    பாட்டில் பிழை இருந்தாலும் பாவத்திலே பிழை இல்லை;

    பிள்ளைகளிடையே அன்னை பேதபாவம் செய்வதில்லை;

    தொல்லை யாவும் தீர்த்து வைப்பாள்;இதிலேதும் ஐயமில்லை;

    ReplyDelete
  3. ////தாயென நீபரிந்தால் வெந்தணலும் சந்தனமன்றோ// excellent!! :)//

    நன்றி சங்கர்!

    ReplyDelete
  4. //குற்றங்குறை இல்லாதோர் அவனியிலே எவருமில்லை;

    பாட்டில் பிழை இருந்தாலும் பாவத்திலே பிழை இல்லை;

    பிள்ளைகளிடையே அன்னை பேதபாவம் செய்வதில்லை;

    தொல்லை யாவும் தீர்த்து வைப்பாள்;இதிலேதும் ஐயமில்லை;//

    நல்லாச் சொன்னீங்க, லலிதாம்மா! நன்றி :)

    ReplyDelete
  5. அழகு

    பாடலைப் படிக்கையிலே ஒரு பரவசம்

    ReplyDelete
  6. pl visit my blog for a sweet song on abiraami annai!

    ReplyDelete
  7. //பாடலைப் படிக்கையிலே ஒரு பரவசம்//

    மிக்க மகிழ்ச்சி, திகழ். நன்றி.

    ReplyDelete
  8. அன்னையின் அருளாளலும்,
    தங்களது அன்பாலும் கண்டோம்..

    அன்பன் சிவ. சி.மா.ஜா
    http://sivaayasivaa.blogspot.com

    ReplyDelete
  9. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, சிவ.சி.மா. ஜானகிராமன் :)

    ReplyDelete