Monday, July 25, 2011

ஆடியிலே கூழு வச்சு...



ஆடியிலே கூழு வச்சு
ஆத்தா ஒனக்காகத் தந்தோம்
ஓடிவந்து எங்களுக்கு கண்ணாத்தா – நீயும்
ஒதவி செய்ய வேணுமடி பொன்னாத்தா!

மஞ்ச குளிச்சுப் புட்டு
மங்கலமா பொட்டு வச்சு
மாவிளக்கு எடுத்து வந்தோம் கண்ணாத்தா – நீயும்
மனசு வக்க வேணுமடி பொன்னாத்தா!

அச்சுவெல்லந் தட்டிப் போட்டு
பச்சரிசி பொங்க வச்சு
பக்குவமா எடுத்து வந்தோம் கண்ணாத்தா – நீயும்
பரிவு காட்ட வேணுமடி பொன்னாத்தா!

தாயே உன் காலடியே
தஞ்சமின்னு ஓடி வந்தோம்
தயங்காம எங்களுக்கு கண்ணாத்தா – நீயும்
தயவு செய்ய வேணுமடி பொன்னாத்தா!

--கவிநயா

('செல்லாத்தா' பாடலின் பாதிப்பு :)

படத்துக்கு நன்றி: http://shakthinesaa.blogspot.com/2011/07/blog-post.html

12 comments:

  1. sellaaththaa !nenjil nillaaththaa!

    ReplyDelete
  2. //sellaaththaa !nenjil nillaaththaa!//

    அதேதான்!

    வருகைக்கு நன்றி லலிதாம்மா.

    ReplyDelete
  3. //very folk!! WOW!! :)//

    வருக சங்கர். பாடித் தாரீகளா? :)

    ReplyDelete
  4. இன்னொரு எளிமையான பாடல் அக்கா. என்னால இப்படி எழுத முடியாது.

    ReplyDelete
  5. //இன்னொரு எளிமையான பாடல் அக்கா. என்னால இப்படி எழுத முடியாது.//

    :) எனக்கு உங்களை மாதிரி எழுத முடியாது :)

    ரசிச்சதுக்கு நன்றி குமரா.

    ReplyDelete
  6. ஆடியும் வந்தது கண்ணாத்தா கவியும் பிறந்தது...

    ReplyDelete
  7. //ஆடியும் வந்தது கண்ணாத்தா கவியும் பிறந்தது...//

    ஆமாம் :) வருகைக்கு நன்றி மாதேவி.

    ReplyDelete
  8. ஆடியிலே கூழு வச்சு
    ஆத்தா ஒனக்காகத் தந்தோம்
    ஓடிவந்து எங்களுக்கு கண்ணாத்தா – நீயும்
    ஒதவி செய்ய வேணுமடி பொன்னாத்தா!
    :)

    ரொம்ப நல்லா பொருந்தி இருக்கு :)

    ReplyDelete
  9. மிக்க நன்றி :)

    ReplyDelete
  10. ஆடியிலே கூழு வச்சு
    ஆத்தா ஒனக்காகத் தந்தோம்
    ஓடிவந்து எங்களுக்கு கண்ணாத்தா – நீயும்
    ஒதவி செய்ய வேணுமடி பொன்னாத்தா!
    :)

    தென்னை மர தோப்பினிலே தேங்காயை பறிச்சிக்கிட்டு ......
    என்ற இசை மிகவும் அற்புதமாக பொருந்தி வருகிறது

    ReplyDelete
  11. ரசித்து வாசித்தமைக்கு மிக்க நன்றி ராஜேஷ் :)

    ReplyDelete