Monday, June 25, 2012

எத்தனை ஜென்மம் நான் எடுத்தாலும்...


சுப்பு தாத்தா சாவேரியில் மிகப் பொருத்தமாகப் பாடித் தந்திருக்கிறார், கேட்டு மகிழுங்கள்! மிகவும் நன்றி தாத்தா!!


எத்தனை ஜென்மம் நான் எடுத்தாலும்...
உன்னையே அண்டிட வேணும்
பக்தியுடன் உன்னை பணிந்திட வேணும் - உள
சுத்தியுடன் உன்னை நினைந்திட வேணும்
முத்தமிழால் உன்னை பாடிட வேணும் - என்
சித்தமெல்லாம் உன்னை நாடிட வேணும்
பித்தென உன்பதம் பற்றிட வேணும்
சொத்தென உனைநிதம் போற்றிட வேணும்
மொத்தமாய் என்னை நான் தந்திடவே வேணும்
உத்தமி உனதன்பை உணர்ந்திடவே வேணும்!


--கவிநயா

3 comments:

  1. bk to pavilion fr clearing arrears:-))

    so refreshing to listen to yr songs in subbu sir's voice!!!

    ReplyDelete
  2. வாங்க லலிதாம்மா! உங்களை ரொம்ப மிஸ் பண்ணினோம்! நலந்தானே?

    ReplyDelete
  3. evvalavu alagaai irukkirathu!
    Natarajan.

    ReplyDelete