Friday, August 10, 2012

தாயின் துதி பாடுவோம்




தாயின் துதி பாடுவோம்

தண்மதி சூடும் அபிராமித்தாயே !உன்
சந்நிதியை நாங்கள் நாடி வந்தோம் ;
அன்னபூரணியே! உன் புகழை இனிய
பண்ணமைத்தே நாங்கள் பாடவந்தோம் !

பதிவிழுங்கிய நஞ்சைக் கற்பால்
                        நெஞ்சில் தடுத்ததேவி!
துதித்திடுவோம் தூயவளே!உன்னைத்
                        தேன்நிறை மலர்தூவி!
காஞ்சிகாமாட்சி, மதுரை மீனாக்ஷி ,
                          நாகை நீலாயதாக்ஷி,
காசி விசாலாக்ஷி என்றெங்கெங்குமுன்
                        கருணைத்திருக்காட்சி!
தண்மதி சூடும் அபிராமித்தாயே !உன்
சந்நிதியை நாங்கள் நாடி வந்தோம் ;
அன்னபூரணியே! உன் புகழை இனிய
பண்ணமைத்தே நாங்கள் பாடவந்தோம் !
குகனின் தாயே ! பறித்தாய் நீ பரமன்
                                         மேனியிலே பாதி;
நிகரில்லாத நாயகி!நீ ஞானமெனும்
                                            நித்தியஜோதி!
நல்லோரின் நலன்காப்பது என்றும்
                                        உந்தன் நன்னீதி ;
எல்லோருமிணைந்தோதுவோம்  பக்தியாய்
                                      உந்தன் அந்தாதி!
தண்மதி சூடும் அபிராமித்தாயே !உன்
சந்நிதியை நாங்கள் நாடி வந்தோம் ;
அன்னபூரணியே! உன் புகழை இனிய
பண்ணமைத்தே நாங்கள் பாடவந்தோம் !





1 comment:

  1. //துதித்திடுவோம் தூயவளே!உன்னைத்
    தேன்நிறை மலர்தூவி!//

    நானும்!

    நன்றி லலிதாம்மா.

    ReplyDelete