Friday, October 19, 2012

திருமகளே! வருவாய்!


திருமகளே! வருவாய்!

பாற்கடலிலுதித்த பேரருட்கடலே !
ஸ்ரீதேவி!வருவாய்!
பார் போற்றும் ப்ருகு முனியின் மகளே!
பார்க்கவி!பரிந்தருள்வாய்!

திருமகளே! வருவாய்!
செல்வவளம் அருள்வாய்!
தூயவளே!வருவாய்!
கொடுக்குங்குணமும் அருள்வாய் !

கீதையெனும் வேதமோதிய மாதவன்
காதலியே!வருவாய்!
ஆதவன்கதிர்பட மலர்ந்திடும் கமலத்தில்
அமர்பவளே !வருவாய்!

திருமகளே! வருவாய்!
செல்வவளம் அருள்வாய்!
தூயவளே!வருவாய்!
கொடுக்குங்குணமும் அருள்வாய்!

சம்புவின் மேனியில் பாதியாம் அம்பிகையின்
மதனியே !வந்தருள்வாய்!
அம்புயமேந்தும் கரத்தாளே!அம்புய
வதனியே! வந்தருள்வாய்!

திருமகளே! வருவாய்!
செல்வவளம் அருள்வாய்!
தூயவளே!வருவாய்!
கொடுக்குங்குணமும் அருள்வாய்!

4 comments: