Tuesday, October 23, 2012

ஷ்யாமளா நவரத்ன மாலிகா




ஷ்யாமளா நவரத்ன மாலிகா

(சம்ஸ்க்ருத ஸ்லோகத்தைத் தழுவி நான் எழுதிய தமிழ்த்துதி
கலாவின் இனிய குரலில் )


1)ஓங்கார பஞ்சரசுகீம் உபநிஷதுத்யான கேலிகலகண்டீம் /
ஆகமவிபிநமயூரீம் ஆர்யாம் அந்தர்விபாவயே கௌரீ/

ஓங்காரக் கூட்டிலுரை பைங்கிளியே!-உபநிடதப்
பூங்காவில் கூவுங்குயிலே!
சாத்திரக்காட்டிலே சஞ்சரிக்கும் மயிலே!
சான்றோர் தொழும் ஷ்யாமளே!

2)தயமான தீர்க்க நயநாம் தேசிகரூபேண தர்சிதாப்யுதயாம்/
வாமகுசநிஹிதவீணாம் வரதாம் சங்கீதமாத்ருகாம் வந்தே/

நல்லருள் பொழியும் நீள்விழியாளே! ஆசானாய்
நன்னெறி புகட்டும் அன்னையே!
வீணை தழுவு மேனியளே!கானம் பிறப்பித்தவளே!
சரணம்!வரந்தரும் சங்கரி !

3)ச்யாமதனு ஸௌகுமார்யாம் சௌந்தர்யானந்த ஸம்பதுன்மேஷாம்/
தருணிமகருணா பூராம் மதஜலகல்லோலலோசனாம் வந்தே!

பேரழகு,இன்பம்,பொருள்,அனைத்துக்கும் மூலமே!
கார்வண்ண எழிற்கோலமே !
பொங்கும் கருணைக்கடலே!ஆனந்தக்கண்ணீர்
தங்கும் விழியாளே!தொழுதேன்!

4)நகமுகமுகரிதவீணா நாதரஸாஸ்வாதநவனவோல்லாஸம்/
முகமம்ப மோதயது மாம் முக்தாதாடங்க முக்தஹஸிதம் தே/

நகநுனிகள் வீணைமீட்ட, நாதந்தரும் இனியசுகம்
முகப்பொலிவை மேலுங்கூட்ட,
முத்துத்தோடணிந்தொளிரும் உன்வதனம் கண்டெனது
சித்தம் சிலிர்த்தாடவேண்டும்!

5) ஸரிகமபதநி ரதாம் தாம் வீணாஸங்க்ராந்தஹஸ்தாம் தாம்/
சாந்தாம் ம்ருதல ஸ்வாந்தாம் குசபரதாந்தாம் நமாமிசிவகாந்தாம் /

ஏழுசுர இன்பத்தில் திளைப்பவளே!-வீணைவிட்டு
நழுவாத விரல்நுனியளே !
அமைதியுரை கனிவுநிறை மனத்தாளே!- தாய்மை பொங்கும்
தனத்தாளே!சிவகாமியே!!


6)அவடுதடகடிதசூலி தாடித தாளீபலாச தாடங்காம்/
வீணா வாதனவேலாகம்பித சிரசம் நமாமி மாதங்கீம்/

பின்னிமுடித்த கூந்தல்,பனங்குருத்துக் காதணியை
மென்மையாய்த் தீண்டி வருட,
வீணை மீட்டித் தலையாட்டி ரசிக்கும் பஞ்ச
பாணி!நின் பதம் பணிந்தேன்!

7) வீணாரவானுஷங்கம் விகசமுகாம் போஜமாதுரீப்ருங்கம் /
கருணாபூரதரங்கம் கலயே மாதங்ககன்யகாபாங்கம்/

வீணைநாதம்போல் இதமானதாம்--முகக்கமலத்
தேன் மொய்க்கும் வண்டொத்ததாம்,
கருணையலை மோதுமுன் கடைக்கண்களில் மனம்
ஒருமித்தேன் மதங்கன் மகளே!

8)மணிபங்கமேசகாங்கீம் மாதங்கீம் நௌமி ஸித்தமாதங்கீம்/
யௌவனவனஸாரங்கீம் ஸங்கீதாம்போருஹானு பவப்ருங்கீம் /

நீலமணிபோலொளிரும் மேனியளே!மாமுனியாம்
மதங்கனின் இனிய மகளே!
இளமையெனும் வனத்து மானே!பூவண்டென
இசைக்கமலம் நுகரும் மாதே!

9)மேசகமாஸேசனகம் மித்யாத்ருஷ்டாந்த மத்யபாகம் தத்/
மாதஸ்தவஸ்வரூபம் மங்கள சங்கீத ஸௌரபம் மன்யே/

பார்க்கத்திகட்டா நீலமேனியளே!கண்ணுக்குப்
புலப்படா நுண்ணிடையளே!
போற்றாதோரே இல்லாப்பேரழகி!சங்கீத
ஸாரத்தின் வடிவே !சரணம்!












2 comments:

  1. விளக்கத்திற்கு மிக்க நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete