Friday, January 11, 2013

நியாயமா?



நியாயமா?

அரன்தன் இடப்பாகம்
சிறந்தவளே!சிவையே!
திறந்தா !உனைப்பாடவே-தாயே!
வரந்தா உனைக்கூடவே.

பரந்துவிரிந்து எங்கும்
நிறைந்த நிரந்தரி!
பரந்தாமன் ப்ரியசோதரி!-சங்கரி!
சரண் தந்தெனை ஆதரி!

பிரிந்த தாயைத்தேடித்
திரிந்து அழும் சேயைப்
பரிந்தணைக்க வா அம்மா.-இன்னும்
மறைந்திருத்தல் நியாயமா?

2 comments:

  1. I sang this in Raag Anandha bhairavi.
    u may listen to this at your leisure.

    http://www.youtube.com/watch?v=DaCBTdVT9RU

    subbu rathinam

    ReplyDelete
  2. இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete