Saturday, October 12, 2013

இசையின் எழிலுருவே!






இசையின் எழிலுருவே!
( song in kala's sweet voice : http://ammanpaattu.blogspot.in/2013/02/blog-post.html )

ஏழுசுர இசையின் எழிலுருவே !உமையே!
"வாழி நீ!"என வாழ்த்தி வணங்குகிறோம் உனையே.


சகலகலாவல்லி!சர்வாணி!சிவானி!
சட்ஜம சங்கீத சுக சாகரம் நீ !
ரிசபேசன் ரமணி!ரஞ்சனி!ருத்ராணி!
ரிதனில் ரீங்காரம் செய்திடும் ராகினி!
வாழி நீ!வாழி நீ!வாழி நீ!வாழி நீ!

கஜமுக ஜனனி!கௌரி!காத்யாயினி!
காந்தார சுரத்தின் கானாம்ருதம் நீ!
மாதங்கி!மதசாலினி!மனோன்மணி!
மத்யமசுரமதன் மங்கலகீதம் நீ!
வாழி நீ!வாழி நீ!வாழி நீ!வாழி நீ!

பவதாரிணி!பஞ்சபாணி!பவானி!
பஞ்சமம் பொழியும் பண்களின் இனிமை நீ!
தர்மசம்வர்த்தினி! தேவி !தாக்ஷாயினி!
தைவத சுரந்தரும் தேமதுர தொனி நீ!
வாழி நீ!வாழி நீ!வாழி நீ!வாழி நீ!

நிதம் நினைவினில் நிறை நித்ய கல்யாணியே !
நிஷாதம் நல்கிடும் நல்லிசை நாயகியே !
ஏழுசுர இசையின் எழிலுருவே !உமையே!
"வாழி நீ!"என வாழ்த்தி வணங்குகிறோம் உனையே.

2 comments:

  1. ஆகா, அருமையாக அமைந்துள்ளது.
    கானாமுதம் குஞ்சரதாசனார் நீலகண்ட சிவனை நினைவு படுத்துகையில் பெருமை.
    நன்றிகள்

    ReplyDelete
  2. உங்கள் பாடல்களில் மிகவும் பிடித்தவற்றில் இதுவும் ஒன்று. மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றிகள் லலிதாம்மா.

    ReplyDelete