Monday, June 16, 2014

ஏன் இன்னும் தாமதமோ?

 

சுப்பு தாத்தா சிவரஞ்சனியில் இனிமையாகப் பாடியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



சுப்பு தாத்தா மீண்டும் சிந்து பைரவியிலும் பாடியிருக்கிறார்.... கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!
 
தாமரைப் பாதங்கள் சரணம் அம்மா
தாமதம் இல்லாமல் வரணும் அம்மா
(தாமரை)

ஏன் இன்னும் தாமதமோ ஏழை எனக்கருள
கார்குழல் கனியமுதே கருணை மழை பொழிய
(தாமரை)

கஞ்ச மலர்ப் பாதங்கள் நாட்டியம் ஆடி வர
கொஞ்சும் இன்பச் சதங்கை ஒலி சங்கீதம் பாடி வர
பஞ்சம் என்ன அன்பிற்கென்று அன்னை நீ ஓடி வர
தஞ்சம் என உனை அடைந்த நெஞ்சமெல்லாம் பூ மலர
 (தாமரை)


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://poetrypoem.com/cgi-bin/index.pl?poemnumber=1126482&sitename=viswabrahma&displaypoem=t&item=poetry

No comments:

Post a Comment