Monday, July 14, 2014

வேண்டாத மனம் வேண்டும்!


ஆஹிரி ராகத்தில் சுப்பு தாத்தா அனுபவித்துப் பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!!


 
வேண்டாத மனம் வேண்டும் வேண்டுகின்றேன்
தூண்டாமல் ஒளிரும் செஞ்சுடரே! தண்மதியே!
(ஏதும் வேண்டாத)

உன்னை என்றும் மறவாத
உள்ளம் வேண்டும், அது போதும்
(வேறெதும் வேண்டாத)

தோன்றும் பொருளிலெல்லாம்
தோன்றாமலே உறைவாய்
தோன்றாத பொருளினிலும்
தூயவளே நிறைவாய்

வேண்டும் பொழுதிலெல்லாம்
வேண்டாமலே வருவாய்
வேண்டாத போதும் என்னை
ஆண்டு கொண்டு அருள்வாய்!
(வேண்டாத)


--கவிநயா

No comments:

Post a Comment