Monday, July 7, 2014

எவரிடத்தில் சொல்வேன்?



சுப்பு தாத்தாவின் அருமையான இசையில், குரலில்... மிக்க நன்றி தாத்தா!!



உன்னிடம் சொல்லாமல்
எவரிடத்தில் சொல்வேன்,
உன்மத்தம் பிடிக்க வைக்கும்
உள்ளத்தின் துயரங்களை?
(உன்னிடம்)

அணு அணுவிலும் இருப்பாய்
அண்டம் பிண்டங்களில் இருப்பாய்
தொழும் அடியவர் மனதில்
கனிவுடன் குடியிருப்பாய்
(உன்னிடம்)

எங்கெங்கிலும் இருந்தும்
என் திசை தெரியலையோ?
எப்பொரு ளிலும் இருந்தும்
என்னுள்ளம் புரியலையோ?
(உன்னிடம்)

--கவிநயா

2 comments: