Friday, July 18, 2014

முதல் ஆடி வெள்ளிக்காக...



சுப்பு தாத்தாவிற்கு மிகவும் பிடித்து விட்டது போலும்! இரண்டு விதமாகப் பாடித் தந்திருக்கிறார்... நீங்களுமெ கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!!

http://youtu.be/GSYguhcVDBg
http://youtu.be/cNoR98258O8

ஆடி வெள்ளிக் கிழமையிலே
கூடி உன்னைப் பாடி வந்தோம்
வீடு தேடி வருவாயே மாரியம்மா, எம்மைச்
சாடும் வினை தீர்ப்பாயே மாரியம்மா!

நாடி வரும் பிள்ளைகளை
ஓடி வந்து காப்பவளே
கோடிக் கண்கள் கொண்டவளே மாரியம்மா, உன்னைக்
கொண்டாடிப் பாடி வந்தோம் மாரியம்மா!

கூழு காய்ச்சிக் கொண்டு வந்தோம்
குழைந்து குடிக்க வாடியம்மா
தாழ்ந்து உன்னைப் பணிந்தோமே மாரியம்மா, எம்மை
வாழ வைக்கும் வடிவழகி மாரியாம்மா!

வேப்பிலையில் இருப்பவளே
வேதனைகள் தீர்ப்பவளே
பூமாலை சூடித் தந்தோம் மாரியம்மா, எங்கள்
பாமாலை கேட்டு மகிழ வாடியம்மா!


--கவிநயா

No comments:

Post a Comment