Monday, August 4, 2014

கண்டேன்!

அன்பிலெல்லாம் உன்னைக் கண்டேன்
ஆகாய விரிவில் கண்டேன்
சிறுமனதின் மகிழ்வில் கண்டேன்
விழிவழியும் நீரில் கண்டேன்!

கரை காணாத் துயரம் கூடக்
கரையுமடி உந்தன் அன்பில்
விழி பெருகும் ஆறும் கூடக்
கலக்குமுந்தன் கருணைக் கடலில்!

உந்தன் பெயரைச் சொல்லிச் சொல்லி
உள்ளம் உருகிப் பாடப் பாட
கல்லும் கூடக் கரையா தோடி?
துயரம் ஓடி மறையா தோடி?


--கவிநயா

No comments:

Post a Comment