Friday, August 8, 2014

நான்காம் ஆடி வெள்ளி... சகலமும் நீ!

அனைவருக்கும் இனிய வரலக்ஷ்மி நோன்பு நல்வாழ்த்துகள்!


மாலவன் மார்பினில்
    மகிழ்ந் துறைந்திடும் தேவி
மங்கல மனையென
    மலர்ந் தொளிர்ந்திடும் தேவி
பகலவன் ஒளியென
    பொலிந்திடும் திருத் தேவி
சகலமும் நீயெனப்
    பணிந்திட அருள் தேவி

கதிரொளி விழிகளில்
    கடலெனும் கருணையும்
மதியொளி வதனத்தில்
    மலரெனும் முறுவலும்
தாமரைக் கரங்களில்
    தாமரை மலர்களும்
பிறஇரு கரம்பொழி
    பல செல்வங்களும்

சிறுமதி யேனுக்கும்
    சீவனைத் தந்திடும்
இனியொரு துயரில்லை
    என்றது உரைத்திடும்
இனித்திடும் தமிழினில்
    இயற்றிடத் தந்திடும்
பனித்திடும் விழிகளில்
    பரவசம் துளிர்த்திடும்!


--கவிநயா

No comments:

Post a Comment