Sunday, August 2, 2015

தாயே ! காத்தருள்வாய்!




தாயே ! காத்தருள்வாய்!


கவிநயத்தேனூறுந் தமிழ்ப்பாமலர் தூவி
சிவையே!செவ்வாய்தோறும் உனைப் பாடி உருகும்
ஆணிப்பொன்மகள் பிறந்த நன்னாளாம் இன்று
ஆடிபெருக்காய் நீ அருள்பெருக்கு அவள்மேல் !


கோடிகோடிச் செவ்வாய்கள் அவள் பார்க்க வேண்டும் !
 பாடலால் பக்தரைப் பரவசமாக்க வேண்டும்  !
பொங்கும் நல்வளத்தோடு அவள் வாழ வேண்டும் !
எங்கிருப்பினும் அவளை நீ காக்க வேண்டும் !


அன்புமகள் கவிநயாவுக்கு இனியபிறந்தநாள்  வாழ்த்துக்கள் !

3 comments:

  1. லலிதாம்மா! இதைப் படிச்சோன்ன அழுகையா வந்திருச்சு.ச்சோ ச்வீட் அம்மா! அன்பிற்கும் ஆசிகளுக்கும் மிக மிக நன்றி!

    ReplyDelete
  2. மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்-க்கா..
    காலம் தாழ்த்திய வாழ்த்தெனினும்
    அன்பு தாழா வாழ்த்தெனக் கொண்டு, ஆசி தருக!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கண்ணா. முருகக் குழந்தை அருளோடு, அன்னை பராசக்தி ஆசியோடு, நீடூழி வாழ்க!

      Delete