Monday, August 1, 2016

உதவி செய்வாய்!

கீதாம்மாவின் மனதை உருக்கும் இனிய குரலில்...

https://soundcloud.com/meenasury/wndnlnmsww8g


உன்னடி பணிந்தேத்த
உதவி செய்வாய்
(உன்னடி)

ஊழ் வினையை மாற்றி
உனதருளைக் காட்டி
(உன்னடி)

கண்ணிருந்தும் குருடாய்
செவியிருந்தும் செவிடாய்
அரிதாம் பிறவியிதை வீணாக்கி
உன்னை அறியாமல் நாளைப் பாழாக்கும், எனக்கு
(உன்னடி)




--கவிநயா


5 comments:



  1. கண்ணிருந்தும் குருடாய்
    செவியிருந்தும் செவிடாய்
    அரிதாம் பிறவியிதை வீணாக்கி
    உன்னை அறியாமல் நாளைப் பாழாக்கும், எனக்கு
    (உன்னடி)

    அருமை !

    அன்புமகள் கவிநயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. அன்பினிய லலிதாம்மா, நலமறிய ஆவல். ஒவ்வொரு வருடமும் மறவாமல் வந்து வாழ்த்தும் உங்கள் அன்பு மனதைக் குளிர வைக்கிறது.அன்புக்கு மிக்க நன்றி..

      Delete
  2. கண்ணிருந்தும் குருடாய்
    செவியிருந்தும் செவிடாய்
    அரிதாம் பிறவியிதை வீணாக்கி
    உன்னை அறியாமல் நாளைப் பாழாக்கும், எனக்கு
    ஊழ் வினையை மாற்றி
    உனதருளைக் காட்டி
    உதவி செய்வாய்
    விதியை மாற்றி அருள்வாய் !

    அழகான வரிகள் ,
    நன்றி அக்கா !

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா !
    அம்மா எல்லா பேறுகளையும் மரணம் இல்லா பெருவாழ்வையும் அருளட்டும் !

    ReplyDelete
    Replies
    1. மரணம் இல்லாப் பெருவாழ்வா! ஆத்தாடி!
      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, தம்பி ஷைலன்! என் மன நிலைமையைத் தான் எழுதினேன்.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete