Monday, March 16, 2020

வர வேணும்; தர வேணும்

இந்த கரோனாவிலிருந்து மக்கள் அனைவரையும் காளி தேவி காக்கட்டும். அனைவரும் நலமுடன் இருக்க அம்மாவை வேண்டிக்கிறேன்.



தமிழாலே புகழ் பாடி
தினந்தோறும் உனைத் தேடி
அலைகின்றேன் அம்மா நீ வர வேணுமே, நான்
கடைத்தேற கடைப் பார்வை தர வேணுமே

நாவிலுன் நாமம் வாழ
நீ என்றன் இதயம் ஆள
அம்மா நீ வரமொன்று தர வேணுமே
என்னோடு உடன் என்றும் வர வேணுமே

ஆனைமுகன் ஆறுமுகன் என
அருமையான பிள்ளைகள் பெற்றாய்
நானும் உன் பிள்ளையன்றோ பாராய் அம்மா
சற்றே நீ என்றன் குரலைக் கேளாய் அம்மா

உன்னை எண்ணி வாழுதல் அன்றி
வாழும் வகை அறியேன் அம்மா
என் பாடல் உனக்காகத் தானே அம்மா, நீ
எனக்காக ஒரு வார்த்தை கூறாய் அம்மா

திருவடியின் நிழலைச் சேர
துயரமெல்லாம் தூசாய் ஆக
அம்மா உன் அருள் எனக்குத் தர வேணுமே
அதற்காய் நீ மனம் வைத்து வர வேணுமே


--கவிநயா

No comments:

Post a Comment