Tuesday, March 24, 2020

உலகத்தைக் காப்பாற்று



உன்னால் ஆகாததும் உண்டோ?
உமையவளே, என்றன் இமையவளே, என்றும்
(உன்னால்)

நிலம் நீர் நெருப்பாகி காற்றும் வெளியுமானாய்
ஐந்து பெரும் பூதங்களாய் எங்கும் விரிந்து நின்றாய்
இயற்கை எனும் பேரில் எங்கும் நிறைந்திருப்பாய்

அன்னையின் வடிவினிலே அரவணைத்துக் காப்பாய்
(உன்னால்)

உலகத்தின் துயர் தீர்ப்பாய் உன்றன் பிள்ளைகளைக் காப்பாய்
குற்றங்களை மறந்திடுவாய்குறைகளெல்லாம் களைவாய்
பெற்றவள் நீயல்லால் பிள்ளைகளுக்கேது கதி?
உற்றவள் நீயன்றோ, உணர்ந்துனை அழைக்கின்றோம்
(உன்னால்)


--கவிநயா

No comments:

Post a Comment