Monday, March 30, 2020

ஓம் சக்தி




சுப்புத்தாத்தா வின் இசையில், குரலில்... மிக்க நன்றி தாத்தா! மிகவும் அருமை தாத்தா.

தன்ன னன்ன தன்ன னன்ன தன்ன னன்ன தனனன
தன்ன னன்ன தன்ன னன்ன தன்ன னன்ன தனனன

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி

சித்தமெங்கும் உன்னை வைத்து நித்தம் நித்தம் தொழுதிட
பக்தி உன்னிடத்தில் வைத்து சித்த சுத்தி செய்திட
சத்தியத்தின் தோற்றம் நீயென் புத்தியின் உள் நின்றிட
சக்தி சக்தி சக்தி யென்று சக்தி உன்னைப் பாடுவோம்

முற்பிறப்பில் சேர்த்து வைத்த வல்வினைகள் எத்தனை
இப்பிறப்பிலே அடுக்கும் பாவ புண்யம் எத்தனை
எப்பிறப்பு எடுத்த போதும் உன்னை என்னுள் வைத்திட
சக்தி சக்தி சக்தி என்று சக்தி உன்னைப் பாடுவோம்

பால்மணம் மாறாத பிள்ளை பாலையாக வந்தவள்
கன்னியாகக் குமரியாக குமரி முனையில் நின்றவள்
அன்னையாக அரவணைத்து அன்பு செய்யும் தாயவள்
அண்டமெல்லாம் ஆக்கி வைத்து அரசியாக ஆள்பவள்

அலையும் கடலைப் போல அலையும் உள்ளம் உள்ளே அடங்கவும்
ஐம் புலன் களும் ஒடுங்கி ஆசைத் துன்பம் அழியவும்
அன்னை உன்றன் நினைவு மட்டும் நெஞ்சின் உள்ளே நிறையவும்
அன்னை அன்னை அன்னை என்று அன்னை உன்னை பாடுவோம்

வாழும் போதும் வாடும் போதும் பாட வேண்டும் உன்னையே
துள்ளும் போதும் துவளும் போதும் தேட வேண்டும் உன்னையே
புகழும் போதும் இகழும் போதும் நாட வேண்டும் உன்னையே
அன்னை அன்னை அன்னை என்று சேர வேண்டும் உன்னையே

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி


--கவிநயா


2 comments:

  1. Pattu musicoda pota nala irukum

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete