Monday, March 9, 2020

கலக்கம் ஏன்?



இன்பமென்ன துன்பமென்ன உலக வாழ்விலே
அன்னையவள் அன்பு உனக்கு இருக்கும் போதிலே?
(இன்பம்)

பக்தியுடன் பணிந்தால் அவள் நிச்சயம் வருவாள்
உள சுத்தியுடன் தொழுதால் அவள் அனைத்தும் தருவாள்
(இன்பம்)

சித்தமெல்லாம் கலங்கும், எனில் நீ கலங்காதே
புத்தியெல்லாம் மயங்கும், எனில் நீ மயங்காதே
தங்க மலர்ப் பாதம் உண்டு, இறுகப் பற்றிக் கொள்
தங்க நிழல் அவள் தருவாள், மனதில் உறுதி கொள்
(இன்பம்)

--கவிநயா

No comments:

Post a Comment