Monday, October 29, 2012

நீயே புகல்!




சுப்பு தாத்தா ஹிந்தோளம் ராகத்தில் அற்புதமாகப் பாடித் தந்திருக்கிறார். மிக்க நன்றி தாத்தா!
 


நீயே புகலென்று உன்னிடத்தில் வந்து விட்டேன்
தாயே சரணென்று தண்டனிட்டு பணிந்து விட்டேன்
மாயா விளையாட்டில் மயங்கி விழுந்து விட்டேன்
சேயைப் பாராயோ சேறாய்க் கலங்கி விட்டேன்!

சொல்லும் சொல்லெல்லாம் சுமையாய் ஆனதம்மா
வில்லில் அம்பாக வேதனை செய்யுதம்மா
கல்லாய் இருந்திருந்தால் கவலை இல்லையம்மா
புல்லாய் நசுங்கையிலே புத்தி மயங்குதம்மா!

பிழைகள் பொறுத்திடுவாய் பிள்ளையைக் காத்திடுவாய்
களைகள் எடுத்திடுவாய் கண்ணின்மணி என்றிடுவாய்
விலைகள் கொடுத்துவிட்டேன் வினைகள் அழித்திடுவாய்
மலைகள் தகர்த்திடுவாய் மகளைக் காத்திடுவாய்!

--கவிநயா

2 comments:

  1. "மலைகள் தகர்த்திடுவாய் மகளைக் காத்திடுவாய்!"


    ReplyDelete