Monday, November 26, 2012

பச்சை வண்ணப் பைங்கிளியே!









பச்சை வண்ணப் பைங்கிளியே – மனக்
கச்சைக்குள் உனை வைத்தேனே!
(பச்சை)

திக்கு விஜயம் செய்தவளே – என்
திக்கில் விஜயம் செய்யாயோ?
சொக்கன் பக்கம் அமர்ந்தவளே – என்
பக்கம் கொஞ்சம் வாராயோ?
(பச்சை)

மதுராபுரியை ஆள்பவளே  - என்
மனமாபுரியை ஆளாயோ?
கனிவாய்ச் சுந்தர(ர்) மொழியாளே – எனைக்
கனிவாய்க் கொஞ்சம் பாராயோ?
(பச்சை)


--கவிநயா

 

3 comments:

  1. அழகு... ரசிக்க வைக்கும் வரிகள்...

    ReplyDelete
  2. சொக்கன்பக்கம் அமர்ந்தாலே
    அக்கம்பக்கம் தெரியாது
    சொக்கன்மூலம் சொல்லினால்
    அக்கம்பக்கம் பார்ப்பாளோ

    ReplyDelete
  3. வாசித்தமைக்கு நன்றி தனபாலன், மற்றும் திவாகர் ஜி!

    ReplyDelete