Monday, January 7, 2013

எக்காலம்?






சுப்பு தாத்தா தபலாவுடன் பாடியிருப்பது இங்கே. அவர் சேர்த்திருக்கும் அழகான ஒளிப்படங்களையும் கண்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


உன்னை யன்றி ஒரு உபாயம் இல்லை
உணர்வது எக்காலம்?

அன்னை உனையன்றி அபயம் இல்லை
அறிவது எக்காலம்?

பெண்ணே உனையன்றிப் புகலும் இல்லை
புரிவது எக்காலம்?

கண்ணில் வழிகின்ற கண்ணீர் மழையும்
காய்வது எக்காலம்?

நினைவில் நீ மட்டும் நின்று உலவுகின்ற
காலம் எக்காலம்?

கால நேரமின்றி உன்றன் நினைவினிலே
களிப்பது எக்காலம்?

கனவு நனவாகி, நினைவு கனவாகிக்
கலப்பது எக்காலம்?

நீயே சதமென்று உன்றன் பதம் வீழ்ந்து
கிடப்பது எக்காலம்?


--கவிநயா

1 comment:

  1. கனவு நனவாகி, நினைவு கனவாகிக்
    கலப்பது எக்காலம்?


    ReplyDelete