Monday, July 1, 2013

வரந் தருவாய் அன்னையே!


ஏக்கம் உண்டு மனதிலே
தூக்கம் இல்லை விழியிலே
வாக்கு நீயும் தந்து விட்டால்
வாழ்க்கை மலரும் நொடியிலே!

கண்ணில் உன்னைக் காணவும்
கருத்தில் உன்னைப் பேணவும்
நாளும் பொழுதும் நாடி உன்னை
நல்ல தமிழில் பாடவும்

வேதனைகள் மாறவும்
சோதனைகள் தீரவும்
தாயுன்றன் மடியினிலே
தலைவைத் திளைப் பாறவும்

வரந் தருவாய் அன்னையே
பரம் என்றேன் உன்னையே
கரங் கொடுத்துக் காத்திடவே
விரைந்திடுவாய் முன்னையே!


--கவிநயா



8 comments:

  1. /// நாளும் பொழுதும் நாடி உன்னை
    நல்ல தமிழில் பாடவும்... ///

    சிறப்பு..

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமையான பாடல் வரிகள் தோழி .வாழ்த்துக்கள் மேலும் தொடருங்கள் .

    ReplyDelete
  3. //பரம் என்றேன் உன்னையே
    கரங் கொடுத்துக் காத்திடவே//
    இந்த இடம் ரொம்ப பிடித்திருந்தது கவிநயக்கா!

    ReplyDelete
  4. //தாயுன்றன் மடியினிலே
    தலைவைத் திளைப் பாறவும்
    வரந் தருவாய் அன்னையே...//
    ரொம்ப அருமை!

    ReplyDelete
  5. மிக்க நன்றி தனபாலன்!

    ReplyDelete
  6. நன்றி அம்பாளடியாள்!

    ReplyDelete
  7. எனக்கும் பிடித்த வரி :) நன்றி ஜனா!

    ReplyDelete