Monday, July 29, 2013

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா!

ஆடி மாதம் - அம்மன் மாதம்!
ஆடி மாதம் - LR ஈஸ்வரியின் மாதமும் கூட:)

அப்படியொரு கூட்டணி, இந்த ஈஸ்வரிக்கும், அந்த ஈஸ்வரிக்கும்!
* எப்படி கவிநயா-அம்மன் = கவிதைக் கூட்டணியோ
* அப்படி LR ஈஸ்வரி-அம்மன் = இசைக் கூட்டணி

வெறுமனே பக்திப் பாடல்கள் மட்டுமல்லாது, சினிமா இசையில் கோலோச்சிய சிம்மக்-குரலி = LR ஈஸ்வரி!
அவர் குரல் மிக்க வித்தியாசமானது; பெண்-சீர்காழி என்று கூடச் சொல்லலாம்!

அத்தனை கனமான குரலென்றாலும்,
காதல் பாடல்களிலும் கலக்கியவர் என்பதை மெய்ப்பிக்கும் = ஹலோ மை டியர் ராங் நம்பர் என்ற பாடல்!
மன்மத லீலை படத்தில், MSV இசையில், யேசுதாசுடன் சேர்ந்து பாடும், இனிய காதல் இசை!



இன்னிக்கி அம்மன் பாட்டில், ஒரு "ஈஸ்வரி" பாட்டு பார்ப்போம்!
ஈஸ்வரியே, "ஈஸ்வரி" -ன்னு பாடுறாங்க:)

கேட்டுக்கிட்டே படிங்க: ஒலிச் சுட்டி இதோ

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா - நாங்க
எண்ணி வந்த வரம் கொடுக்க - வாரும் அம்மா
ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா - இங்கு
உன்னை அன்றி வேறு கதி - ஏதம்மா 
(ஈஸ்வரியே மகமாயி)

சமயபுரம் சன்னதியின் வாசலிலே - லோக 
சங்கரியே உருகி நின்றோம் பூஜையிலே
கருணை உள்ள தெய்வமாக நீ இருப்பாய் - நாங்க 
கொண்டாட வந்ததற்குப் பலன் கொடுப்பாய்
(ஈஸ்வரியே மகமாயி)

வேண்டுவோர்க்கு வாழ்வெல்லாம் நலம் தருவாய் -  சிங்க 
வாகனத்தில் சக்தியாக வலம் வருவாய்
ஊர் வாழ மழையாக வடிவெடுப்பாய் - இந்த
உலகத்துக்கே உன் அருளால் குடை பிடிப்பாய்
(ஈஸ்வரியே மகமாயி)

படவேட்டு எல்லையிலே குடி இருப்பாய் -  நல்ல 
பத்தினிகள் மஞ்சளுக்குத் துணை இருப்பாய்
மங்களங்கள் பெருக வேணும் சக்தியிலே - அதை
குங்கமமாய் தரவேணும் நெத்தியிலே
(ஈஸ்வரியே மகமாயி)

வரிகள்: தவசீலன்
குரல்: LR ஈஸ்வரி

2 comments:

  1. LR ஈஸ்வரி அவர்களின் குரலுக்கு தனி சக்தி... நன்றிங்க...

    ReplyDelete
  2. நெஞ்சை விட்டு நீங்காத பாட்டு . நன்றி கே ஆர் எஸ் !


    அம்மன் பாட்டு அன்பர்கள் படவேட்டு அம்மன் பற்றி கே ஆர் எஸ் அளித்துள்ள விவரம் "ஆ.வெ.1: படவேடு! - செல்லாத்தா! " எனும் பதிவில் காணவும்

    ReplyDelete